News Just In

6/18/2021 07:37:00 AM

பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை- 11பேருக்கு கொரோனா தொற்று...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வேலைத்திட்டம் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் 55 பேருக்கும் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய முப்பததாறு (36) நபர்களுக்கும் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் பதினொரு (11) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: