News Just In

2/15/2021 08:43:00 AM

சுவிஸ் வாழ் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதிபங்களிப்பில் பொத்துவில் புத்தொளி மன்றத்தினால் மாணவர்கட்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!!

பொத்துவில் புத்தொளி மன்றத்தினால் சுவிஸ் வாழ் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதிபங்களிப்பில் வறிய மற்றும் போர், கொரோனா தாக்கங்களினால் தமது வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கட்கு கற்றல் உபகரணம் வழங்கி கல்வி மேம்பாட்டை அதிகரிப்பதற்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. 

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆறு பாடசாலை மாணவர்கட்கு இரண்டாம் கட்டமாக இவ்வுதவி புத்தொளி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பின்வரும் ஆறு பாடசாலைகளும் அடங்குகின்றன.
திகோ/தங்கவேலாயுதபுரம் அ.த.க. பாடசாலை- 21 மாணவர்கள், 
திகோ/கோமாரி மெ.மி.த.மகாவித்தியாலயம்- 100 மாணவர்கள்,
திகோ/செல்வநகர் துளசி வித்தியாலயம்- 15 மாணவர்கள்,
திகோ/மணற்சேனை அ.த.க.பாடசாலை- 55 மாணவர்கள்,
திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயம்- 126 மாணவர்கள்,
திகோ/திருப்பதி அ.த.க.பாடசாலை- 54 மாணவர்கள்,
தங்கவேலாயுதபுரத்தில் இருந்து வேறு பாடசாலை செல்லும் 6 மாணவர்களுமாக மொத்தம் 377 மாணவர்கட்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது.

இவ்வைபவத்தில் திரு.க.நல்லதம்பி ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர், திரு.ப.கிருஸ்ணபிள்ளை ஓய்வுநிலை அதிபர் திரு.ந.ரதிசன் பொறியியலாளர், மற்றும் பாடசாலை அதிபர்கள் திரு. உதயகுமார், திரு.துரைராசசிங்கம், திரு.சிறிகாந்த், திரு. சுசந்த ஆகியவர்களும் புத்தொளி மன்றத்தின் தலைவர் திரு.த.வசந்தன், செயலாளர் திரு.கோ.சிறிதரன், உப செயலாளர் திரு. கை.சதீஸ் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.








No comments: