News Just In

12/29/2020 06:14:00 PM

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி...!!


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய மாகான மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் இருந்து இரண்டு கிலோ மீற்றரிலும் குறைந்த அளவிலான தொலைவில் உள்ள ஏதேனுமொரு பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை முன்வைக்கும் வகையில் மத்தியமாகாண ஆளுநர் லலித் யூ கமகே இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.

No comments: