News Just In

12/31/2020 06:51:00 AM

கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 199ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று(30) கொரோனா மரணங்கள் நான்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் மற்றும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்,  கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆணொருவர், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் உட்பட நேற்று மாத்திரம் 4 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நால்வரும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: