News Just In

9/18/2020 08:13:00 AM

புதிய வீதி ஒழுங்கில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்க நடவடிக்கை!!


இலங்கையில் கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய வீதி ஒழுங்கு தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் காவற்துறை மேற்கொண்ட ஆய்வுகளை அடுத்து உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்க பிரதி காவற்துறை மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாகன நெரிசலை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான உந்துருளிகளும் முச்சக்கர வண்டிகளும் பயன்படுத்தப் படுவதனால் பாதைகளில் போக்குவரத்து பயணிகள் பல சிரமங்களை எதிர்கொள்ளுவதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: