நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி திலிபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கோண்டாவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள், காவற்துறையினால் அகற்றப்பட்டுள்ளன.
திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்தது.
இந்த தடையுத்தரவுக்கு அமைய குறித்த உருவப்படம், நினைவேந்தல் பதாதைகள் காவற்துறையினால் அக்கற்றப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

No comments: