இதனையடுத்து, குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழுவில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் உள்ளடங்குகின்றனர்.
அந்தவகையில் குறித்த குழுவில், அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில, அமைச்சர் மொஹமட் அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இந்த திருத்தத்தை கொண்டுவருவது சிறந்தது என அரசாங்க தரப்பினால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகள் மற்றும் ஏனைய சிறுபான்மைக்கட்சிகள், குறித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் சர்வாதிகாரப்போக்குக்கு வழிவகுக்கும், சிறுபான்மையினரின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையுமென அதனை எதிர்த்து வருகின்றன.
இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: