News Just In

4/20/2020 10:52:00 AM

அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினம் 19.04.2020 நேற்று ஞாயிற்றுக் கிழமை அவரது குடும்பத்தாரால் ஊரடங்கு காலப்பகுதி என்பதால் வீட்டில் வைத்து அனுட்டிக்கப்பட்டது.

இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுஅனுட்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாநகர சபை உறுப்பினர் தவராஜா, அன்னை பூபதி அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.















No comments: