பெரும் சிவனிரவு (சிவராத்திரி) தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு எங்கிலும் வில்வ மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் முதலாவது கட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமானது.
தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பினால் மேற்கொள்ளப்படும் மாதாந்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக 108 வில்வ மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
கும்புறுமூலை, பாலையடித்தோணா, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, களுவாஞ்சிக்குடி, குருமன்வெளி, களுதாவளை ஆகிய இடங்களில் முதலாம் கட்டமாக வில்வ மரக்கன்றுகள் நடப்பட்டன.
அகில இலங்கை சைவ மகா சபையின் கிழக்கு பிராந்திய அமைப்பாளர் உயிரொளிச்சிவம் க. பிரதாப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குறித்த வில்வ மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தன.
No comments: