News Just In

2/13/2020 12:27:00 PM

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!


நேற்று (12) இரவு 10.30 மணியளவில் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த வீதியில் காணப்படும் சீமெந்து கட்டில் மோட்டார் சைக்கிள் வேகமாக சென்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் என்ற 35 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: