News Just In

1/12/2020 01:50:00 PM

தாழங்குடா பேருந்து தரிப்பிடங்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி


தாய் நாட்டை அழகு படுத்துவோம் ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ் நாடெங்கும் வர்ண அலங்கார வேலைகள் மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு-தாழங்குடா கிராமத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையங்கள் மூன்று தாழங்குடா சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மூலம் வர்ணமயப்படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு காட்சிகள் சுவர்களில் வரையப்பட்டுள்ளதுடன், மக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தும் தொலைபேசி இலக்கங்களும் வரையப்பட்டுள்ளன. 

வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்களை இன்று விளையாட்டு கழக உறுப்பினர்கள் திறந்து வைத்ததுடன், அதன் அருகாமையில் உள்ள வீதி ஓரங்களில் சிரமதானப் பணியினையும் மேற்கொண்டனர்.















No comments: