News Just In

1/11/2020 01:33:00 PM

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையலாம்-எம்.ஏ.சுமந்திரன்

தமது கட்சியில் இருந்து எவரையும் வௌியில் அனுப்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு தெரிவித்த அவர் பிரிந்து சென்றவர்களுக்காக கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துகொள்ள முடியும் எனவும் அவர்  தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிக்காலம் முடியும் வரை சி.வி.விக்னேஸ்வரன்  கூட்டமைப்பில் இருந்துவிட்டு, புதுக்கட்சி ஆரம்பித்த பின்னர்  அவர் தன்னை மாற்றுத் தலைமையென கூறி வருவதாகவும்

இதேபோல கஜேந்திரகுமாறும் தன்னை மாற்றுத்தலைமை என கூறிக்கொள்வதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், அவர்கள் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வௌியே போனார்கள் என்பது அவர்களுக்குத்தான்  தெரியுமென மேலும் தெரிவித்தார்.

No comments: