News Just In

1/28/2020 01:50:00 PM

மட்டக்களப்பு அடங்கலாக நாட்டின் 11 இடங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களை அனுமதிக்க நடவடிக்கை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களை IDH வைத்தியசாலை தவிர்ந்த நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு , யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கண்டி, வட கொழும்பு, கராப்பிட்டிய, அநுராதபுரம், கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான நோயாளர்களை அனுமதித்து தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளன.

No comments: