மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் விசேட தேவையுடைவர்களின் நிறுவனங்களின் ஒன்றான மென் கெப் நிறுவனத்தின் விசேட தேவையுடையவர்களின் இந் நிகழ்வு நுவரெலியா, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய மூன்று பாடசாலை மாணவர்களையும் ஒன்றிணைத்து நிறுவனத்தின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மரியாள் பேராலய பங்கு தந்தை சி வி .அன்னதாஸ் மற்றும் பிரதம அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒளிவிழா நிகழ்வில் விசேட தேவையுடையவர்களின் விசேட கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் விசேட தேவையுடையவர்களின் பெற்றோர்கள் , பிள்ளைகள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , அரச அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர் .
No comments: