News Just In

12/03/2019 05:21:00 PM

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை கடலரிப்பு அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாகக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக் கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாகக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்குச் சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது.

இது குறித்து மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது . இதனால் கரையோர மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவர்கள் பல மூலதனங்களைச் செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்கு சென்றுவெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நடத்திவருவதாக மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


No comments: