நேற்று மாலை 07 மணியளவில் இரணைமடு குளத்திற்கு செல்லும் வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரணைமடு குளத்தை பார்வையிட பெரும்பாலான மக்கள் வருகை தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: