News Just In

12/24/2019 06:01:00 PM

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு


கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான ரவிச்சந்திரன் ரிதுசன் என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (24) 2 மணி அளவில் வீட்டாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வீட்டு அங்கத்தவர்கள் வேலைகளுக்காக வெளியில் சென்று 2 மணியளவில் வீடு திரும்பிய போதே முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் உள்ள வீட்டில் தொங்கிய நிலையில் வீட்டாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: