திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் மாணவர்களின் கால்பந்தாட்டத் தரத்தை உயர்த்தும் முகமாக 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் இடையே சனிக்கிழமை (30.11.2019), ஞாயிற்றுக்கிழமை (01.12.2019) ஆகிய இரு தினங்களும் லீக் முறையிலும் நொக் அவுட் முறையிலும் கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக எட்டு பாடசாலை அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியில் பங்குபற்றுகின்றன. முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் பதக்கங்கள் வழங்கப்படும்.
சிறந்த கோல் காப்பாளர், அதிக கோல் போட்டவர், இறுதிப்போட்டி நாயகன், தொடர் நாயகன் ஆகிய விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
11/22/2019 05:46:00 PM
Home
/
விளையாட்டு
/
திருகோணமலையில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் கால்பந்தாட்ட திறனை ஊக்குவிப்பதற்கான போட்டி
திருகோணமலையில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் கால்பந்தாட்ட திறனை ஊக்குவிப்பதற்கான போட்டி
Subscribe to:
Post Comments (Atom)


No comments: