காணாமல்போன ஆசிரியையொருவர் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த கம்பளை கீரப்பனையைச் சேர்ந்த நிஸன்சலா என்ற 27 வயதுடைய ஆசிரியை காணாமல்போய் எட்டு தினங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (08.10.2019) காலை விக்டோரியா நீர்த் தேக்கப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை கடந்த முதலாம் திகதி பாடசாலையிலிருந்து தனது வீட்டுக்கு திரும்பிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இரவாகியும் வீடு வந்து சேராததையடுத்து உறவினர்கள் கம்பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து சம்பவ தினத்தன்று குறித்த ஆசிரியை வீடு திரும்பிய காட்சி ஆசிரியையின் வீட்டிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த ஆசிரியைக்கு இம்மாதம் 29 ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் பதிவுத்திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments: