தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளுக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும், சுயநிர்ணய எல்லை என்ற கோரிக்கையை துளியளவும் ஏற்க முடியாது என்று கடுமையாக சாடியுள்ளனர்.
ஓமல்பே சோபித தேரரின் கருத்து
இந்த 13 கோரிக்கைகளை எந்த கட்சி ஏற்றுக் கொள்கின்றது என்பதை நாமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றோம். எந்தவொரு வேட்பாளருக்கும் இவற்றை கையிலெடுத்து வாசிப்பதற்கு கூட உரிமையில்லை.
எல்லே குணவங்ச தேரரின் கருத்து
இவர்கள் முழு இலங்கையையும் சுயநிர்ணய எல்லையாகக் கோரினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் வடக்கை மாத்திரம் கோருவதை ஏற்க முடியாது.
மாகல்கந்தே தேரரின் கருத்து
தமிழ் அரசியல்வாதிகளின் அடிப்படைவாத கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோருகின்றேன்.
அஸ்கிரிய பீடத்தின் உப தேரர் வெனருவே உபாலி தேரரின் கருத்து
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் தூண்டுதலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள எந்த யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
No comments: