News Just In

2/01/2026 06:21:00 PM

காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு

காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு



காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை.

ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன.

காங்​கோ​வின் வடக்​குப் பகு​தி​யில் எம்23 என்ற கிளர்ச்​சிக் குழு செயல்​படு​கிறது. இந்த குழு கோமா, ரூபையா உள்​ளிட்ட பல்​வேறு பெரிய நகரங்​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​திருக்​கிறது. எம்23 கிளர்ச்​சிக் குழு​வின் கட்​டுப்​பாட்​டில் உள்ள ரூபை​யா​வில் மிகப்​பெரிய சுரங்​கம் செயல்​படு​கிறது. அங்கு கோல்​டான் என்ற கனிமம் வெட்டி எடுக்​கப்​படு​கிறது.

இது செல்​போன், கணினி, விமான பாகங்​கள் தயாரிக்க பயன்​படுத்​தப்​படு​கிறது. ரூபையா சுரங்​கத்​தில் சுமார் 4,000 தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வந்​தனர். சில நாட்​களுக்கு முன்பு சுரங்​கத்​தில் மண் சரிவு ஏற்​பட்​டது. இதில் இது​வரை 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. அவர்​கள் சுரங்​கத்​துக்​குள் சிக்கி உயி​ரிழந்​திருக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது.

இதுகுறித்து காங்​கோ​வில் பணி​யாற்​றும் சர்​வ​தேச தொண்டு அமைப்​பினர் கூறும்போது, ”எம்23 கிளர்ச்​சிக் குழு​வின் கட்​டுப்​பாட்​டில் உள்ள சுரங்​கங்​களில் போதிய பாது​காப்பு இல்​லை. தொழிலா​ளர்​கள் தங்​கள் விருப்​பம் போல சுரங்​கம் தோண்​டு​கின்​றனர். காங்கோ சுரங்​கங்​களில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​களின் பாது​காப்பை ஐ.நா.சபை உறுதி செய்ய வேண்​டும்” என்றனர்.

No comments: