News Just In

10/08/2025 03:54:00 PM

வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இவ் அரசு செயல்பட வேண்டும்..!இரா சாணக்கியன்

வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இவ் அரசு செயல்பட வேண்டும்..!


இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 08.10.2025. வழமையாக புதன் கிழமைகளில் பிரதமரிடம் கேள்விகளுக்கான பதிலை கேட்க முடியும். சென்ற வெள்ளிக்கிழமை நான் பிரதமரிடம் முன்வைத்த முன்வைத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பதான கேள்விகளுக்கு இன்றைய தினம் பிரதமர் தனக்கு நேற்றைய தினம்தான் கேள்வி கிடைத்தது என்றும் தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் இன்றையதினம் கூறப்பட்டது.

அவ் கேள்வியானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. உள்நாட்டு பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடப்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக எனது கேள்வியாது பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கின்றது. வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இவ் அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான எமது மக்களுக்கான பிரச்சனைக்களுக்கான தீர்வுகளை அரசு இவ் நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதாக இன்றைய தின உரையானது அமைந்தது.

No comments: