News Just In

10/12/2025 09:56:00 AM

அதிகரிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு


அதிகரிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு



பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் சுரக்ஷா சிசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குக் கிடைக்கும் நிவாரணங்களை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவாவின் தலைமையில் ‘இலங்கை காப்பீட்டுக் கூட்டுத்தாபன ஜெனரல் லிமிடெட்’ உடன் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, புதிய நிவாரணங்கள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், புதிய திருத்தப்பட்ட நிவாரணங்கள் செப்டம்பர் 01, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்களுக்கு ஏற்றாற் போல் செயற்படுத்தப்படும்.

ரூ. 300,000/- அரசு அல்லது தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்காக கிடைக்கும்.

வெளிநோயாளர் சிகிச்சை நிவாரணம் ரூ. 20,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீவிர நோய் நிவாரணம் ரூ. 1,500,000/- முதல் கிடைக்கும்.

இதேவேளை, விபத்துகள் காரணமாக ஏற்படும் ஊனத்திற்கான நிவாரணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மொத்த நிரந்தர ஊனத்திற்கு ரூ. 200,000/-, நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ. 150,000/-க்கும், தற்காலிக ஊனமுற்றோருக்கு ரூ. 25,000/- முதல் ரூ. 100,000/- வரையிலான நிவாரணங்கள் கிடைக்கும்.

ஆயுள் காப்பீட்டின் கீழ், ரூ. 180,000/-க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக, “அஸ்வேசும” திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் இறந்தால், ஒரு மாணவருக்கு ரூ. 75,000/- பெற தகுதி உண்டு.

No comments: