News Just In

6/21/2025 10:59:00 AM

மட்டு. மாவடிச்சேனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்கள் கைது

மட்டு. மாவடிச்சேனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்கள் கைது


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு இளைஞர்களை வெள்ளிக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை எம்.கே.எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இரு இளைஞர்கள் நடமாடியுள்ளனர்.

இதனை அவதானித்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மிளகாய்த்தூள், கையுறை, முககவசம் ஆகிய பொருட்களை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான இருவர் தொடர்பாகாவும் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: