News Just In

6/26/2025 02:01:00 PM

சிறுவர் கலாச்சார முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


சிறுவர் கலாச்சார முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும், அம்பாரை மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவும் இணைந்து நடத்திய சமூர்த்தி சிறுவர் கழகங்களுக்கு இடையிலான "சிறுவர் கலாச்சார முகாமில்" கலந்து கொண்ட பிர்லியன்ட் பாலர் பாடசாலை சிட்டுக்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (25) பிர்லியன்ட் பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.சீ.ஷாமிலா பானு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக் கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல் ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

No comments: