உலக சுற்றாடல் தினத்தை செயல்படுத்தும் விதமாக சைல்ட் பண்ட் (ChildFund) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் பிரதேச இளைஞர்கள் அமைப்பினூடாக “இயற்கையின் மூலம் இறைவனை நேசிப்போம்” எனும் தொனிப் பொருளில் பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனைக்கெதிராக விழிப்பூட்டும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தொடுவானம் இளைஞர் அமைப்பையும் இயற்கை நேசர்கள் அமைப்பையும் சேர்ந்த சுமார் நூறிற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் சுற்றாடலை இயற்கை மாறாமல் பேணும் விதமாக பல்வேறு செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையில் இருந்து விடுபட்டு வீட்டையும் வீட்டுச் சூழலையும் கிராமத்தையும் நாட்டையும் பாதுகாப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் வவுணதீவு பாலத்தில் இருந்து வவுணதீவு உழவர் சந்தி வரை இவ்வாறான தெருவோரங்களில் வீசப்பட்டு அடைந்து கிடக்கும் பெருந்தொகை பொலித்தீன் பிளாஸ்ரிக் திண்மக் கழிவுகள் சிரமதானம்; மூலம் அகற்றி அந்த இடங்கள் துப்புரவு செய்யப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நடை பவனியிலும் சிரமதானப் பணிகளிலும் பிரதேச இளைஞர் யுவதிகளுடன் இணைந்து இத்திட்டத்தை அமுலாக்கம் செய்யும் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் உட்பட அதன் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments: