மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று(27-06-2021) அன்று சவுக்கடி, தளவாய் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வந்தாறுமுலை சேர்ந்த விஜயன் தினேஸ்குமார் என்பவரே இவ்வாறு சடமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
2017ம் ஆண்டு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குடும்பப்பிரச்சினை எதுவும் இல்லாத நிலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சகோரதரர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் தொடர்பில் நீண்ட நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் என்று கூறிக்கொள்பவர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவந்த நிலையில் 2018ம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடுகளும் செய்துள்ளனர். மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இவர் பல இருப்பிடங்களும் மாரி இருந்து வந்துள்ளார் கடைசியாக வசித்து வந்த இடத்தில் தான் இச் சம்பவம் நடை பெற்றுள்ளது. அவர் அதன் அச்சம் காரணமாக வெளியில் செல்லாமல் தோட்டத்திற்குள்ளேயே இருந்துவந்துள்ளதாகவும் அவர் அது தொடர்பில் மனஅழுத்தங்களுக்குள்ளாகிய நிலையிலிருந்ததாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
செங்களடி வைத்தியசாலையில் இருந்த சடலத்தை. 28-06-2021
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுகக்ப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் 29-06-2021 சடலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுகக்ப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் 29-06-2021 சடலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments: