
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே (01) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் ரேஞ்சர்ஸ் (Rangers) படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நிலைமை கட்டுப்படுத்த அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எம்.டி. கான் வீதியில் (MT Khan Road) உள்ள தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதரக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றுள்ளனர்.
No comments: