
காஸாவில் உணவு கிடைக்காமல் மணலை சாப்பிடுவதாக சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப்பொருட்களுக்கும் இஸ்ரேல் தடை விதித்தது.
ஆனால் குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதிக்கிறது. இது அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை.
இதற்கிடையில் உணவு மையங்களை நோக்கி செல்லும் மக்களும் இஸ்ரேல் படையினரால் சுடப்படுகின்றனர்.
இந்த நிலையில் காஸாவில் உணவு கிடைக்காமல் தவிப்பதாக சிறுவன் பேசிய வீடியோ பலரது மனதையும் உலுக்கும் வகையில் உள்ளது.
குறித்த சிறுவன் அந்த வீடியோவில், "காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன.
ஆனால், அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள்" என கெஞ்சுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக காஸாவில் உணவின்றி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப்பொருட்களுக்கும் இஸ்ரேல் தடை விதித்தது.
ஆனால் குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதிக்கிறது. இது அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை.
இதற்கிடையில் உணவு மையங்களை நோக்கி செல்லும் மக்களும் இஸ்ரேல் படையினரால் சுடப்படுகின்றனர்.
இந்த நிலையில் காஸாவில் உணவு கிடைக்காமல் தவிப்பதாக சிறுவன் பேசிய வீடியோ பலரது மனதையும் உலுக்கும் வகையில் உள்ளது.
குறித்த சிறுவன் அந்த வீடியோவில், "காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன.
ஆனால், அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.
எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள்" என கெஞ்சுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக காஸாவில் உணவின்றி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments: