
மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்த 30 வயதானவர் எனவும் இலுப்படிச்சேனையில் திருமணம் முடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக பாலத்தின் கீழ் வந்து விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலத்தின் அருகில் விஷ போத்தல், மதுபான போத்தல், தண்ணீர் போத்தல் என்பனவும் காணப்படுகிறது.
No comments: