News Just In

3/13/2025 02:49:00 PM

கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளம் பிக்கு உயிரிழப்பு! பொலிஸார் விசாரணை!


கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளம் பிக்கு உயிரிழப்பு! பொலிஸார் விசாரணை




கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 27 வயது புத்த துறவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டியில் உள்ள உடஹிகுல்வல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் புத்த துறவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.

ஆரண்ய சேனாசனத்தில் தனியாக வசித்து வந்த குறித்த புத்த துறவி அவரது படுக்கையில் இறந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில், சேனாசனத்தின் தலைமைத் துறவி, அவிசாவெல பகுதிக்கு கற்பிப்பதற்காக சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த ஆரம்ப விசாரணைகளில் மரணத்திற்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை

No comments: