பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களின் சூழ்ச்சியா! அனந்தி பகிரங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவை கூட்டம், கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் பதவி விலகல் தொடர்பில் தமிழர் பரப்பில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுச் சபையின் முடிவு தொடர்பில் அதிருப்தி அடைந்ந பின்னணியிலேயே பேராசிரியர் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்றையதினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன்,
“பேராசிரியரின் பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களின் சூழ்ச்சி உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் செயற்பாடுகள் கல்வி சமுகத்திற்கு எடுத்துகாட்டானது.
அவருடைய செயற்பாடுகள் பல்கழைக்கழக சமுகத்திற்கு ஒழுக்க செயற்பாடுகளை உருவாக்கியிருந்தது” என சுட்டிக்காட்டியுள்ளார்
1/28/2025 11:14:00 AM
பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களின் சூழ்ச்சியா! அனந்தி பகிரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: