News Just In

1/27/2025 07:22:00 PM

மட்டக்களப்பில் 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு



மட்டக்களப்பில் மாடு மேய்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞனுடன் மூன்று பேர் நேற்று (26) வாழைச்சேனை காவல் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்க்க சென்றுள்ளனர்.

சம்பவதினமான இன்று (27) குறித்த இளைஞர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: