News Just In

12/22/2024 04:53:00 PM

தமிழர் பகுதியில் கோர விபத்து இளைஞன் மரணம்!

தமிழர் பகுதியில் கோர விபத்து இளைஞன் மரணம்!




மட்டக்களப்பில் உள்ள மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (21-12-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மாமாங்கம, பாடசாலை வீதியை சேர்ந்த 26 வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தகாரர் ஒருவர் அவரது வாகனங்களை வீதியில் நிறுத்திவைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தற்போது மட்டக்களப்பில் மழைபெய்துவரும் நிலையிலும் குறித்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதி இருளாகவுள்ள நிலையிலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரிய வாகனங்களை ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுவது தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: