தலைவன்பிறந்தஊர்என்பதால்நிராகரிக்கப்பட்டதா;வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.
இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர்.
12/22/2024 04:40:00 PM
Home
/
Unlabelled
/
தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம்!
தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: