News Just In

9/18/2024 08:09:00 PM

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!



2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 100% சீருடைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், 825 பிரிவெனாக்களுக்கு தேவையான காவி உடையும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சீருடைகள் மற்றும் காவி உடைகள் விநியோகிக்கப்படவுள்ளன

No comments: