சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் - பொ. ஐங்கரநேசன்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது.
இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது.
அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: