
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனுக்கும் இலங்கைக்கான உலக உணவு திட்ட வதிவிட பணிப்பாளர் அப்தூல் ரஹிம் சித்திக்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உலக உணவு திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பல செற்றிட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்காக வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தினை மட்;டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 2024 ஆண்டுக்கான திட்டமாக 49 மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கின்றது. இத்திட்டத்தினை மேலும் மட்டக்களப்பு , பட்டிருப்பு , கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய நான்கு கல்வி வலயங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கையும் இதன்போது விடுக்கப்பட்டது.
அனர்த்த அபாயங்களை குறைப்பதற்கான செயற்திட்டங்களை ஏனைய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்துமாறும் அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அரசாங்க கூட்டான்மை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதிஸ்குமார், வி.நவநீதன், உலக உணவு திட்ட உயர் அதிகாரிகள், உலக உணவு திட்டம் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் ரஜனி கேதிஸ்வரன், மற்றும் பல அதிகாரிகளும் விசேட சந்திப்பில் கலந்து கொண்டனர்
No comments: