News Just In

7/09/2024 02:16:00 PM

அலி சப்ரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!



சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் குறித்த பகிரங்க பிடியாணையினைப் பிறப்பித்துள்ளார்.

புத்தளம் நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினா் அலி சப்ரி ரஹீமை எதிரியாக குறிப்பிட்டு கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளாா்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: