News Just In

4/10/2024 11:13:00 AM

விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தமிழ் தலைவர்கள்! அரசியல் விமர்சகர் அருள்



தமிழீழ விடுதலைப்புலிகளால் பதவிகளை பெற்ற தமிழ் தலைவர்கள் பலர் விடுதலைப்புலிகள் ஆபத்தில் இருந்தபோது தொலைப்பேசிகளை இணைப்புகளை துண்டித்துவிட்டு உதவி செய்யாது நல்ல செய்திக்காக காத்திருந்ததாக பிரித்தானிய அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில்   கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

நல்ல செய்தி கிடைத்த பின்னர் புத்தாடை அணிந்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமைக்கு நன்றி தெரிவித்தது. மறுபக்கம் சரத் பொன்சோகாவிற்காக வாக்கு சேகரித்தது.

இவ்வாறான பின்னணியில் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி வாக்கு சேகரிக்கின்றனர்.

ஏனெனில் தமிழ் அரசியல் தலைவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராடுபவர்கள் அல்ல. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் போன்றோர் சட்டம் என்ற மாயை ஊடாக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

No comments: