News Just In

3/22/2024 07:27:00 PM

ஈஸ்டர் தாக்குதலை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும்!



ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி மகா விகாரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கெடிகே ரஜமஹா விகாரையின் புதிய தர்ம மந்திர் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

"எனக்கு ஏமாற்றத்தை விட பெரிய வலி ஒன்று உள்ளது. நான் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு செல்ல விரும்பினேன். அந்த திட்டத்தை என்னால் சரியான முறையில் கொண்டு செல்ல முடியவில்லை. எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியின் ஆதரவும் கிடைக்கவில்லை. நான் ஐந்து ஆண்டுகளுக்கு சில மாதங்கள் குறைவான காலம் அரசை கொண்டு சென்றேன். 19 வது திருத்தச் சட்டத்தால் எனது அதிகாரங்களை இழந்தேன். அதை விரும்பி தான் கொடுத்தேன். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தவறாக பயன்படுத்துவார்கள் என்று நினைக்கவில்லை. அரசாங்கமும் எதிர்கட்சியும் என்னைத் தாக்கின. அதனை அடுத்து ஈஸ்டர் தாக்குதல் வந்தது. ஈஸ்டர் தாக்குதலை உண்மையில் செய்தது யார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். நீதிமன்றம் என்னிடம் கோரினால், ஈஸ்டர் தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மற்றொன்று அதை ரகசியமாக வைத்திருப்பது அந்த நீதிபதிகளின் கடமை என்பதையும் நான் கூற விரும்புகிறேன்''. என குறிப்பிட்டார்

No comments: