(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில் வியாழக்கிழமை(14.02.2024) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்ட ரக வானத்தில் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்விபத்துச் சம்பவத்தில் அருகிலிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வட்டா ரக வாகனமும், பேருந்தின் முன் பகுதியில் பாரிய சேதம் அடைந்துள்ளன.
விபத்து இடம்பெற்ற இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: