News Just In

12/12/2023 06:16:00 PM

அரச பேருந்து சாரதியின் அசமந்தப்போக்கு!








அதிகளவு நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்றையதினம் 12 .30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், கவனயீனமாக செயற்படும் சாரதிகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்நிலையில், அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: