News Just In

10/26/2023 07:56:00 AM

மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திய நிலையில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: