News Just In

10/24/2023 03:38:00 PM

ஆசிரியர் சங்க பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!




கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது

இதன் காரணமாக பொரளை-கொட்டாவ வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: