News Just In

5/17/2023 08:13:00 PM

உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்!




நூருல் ஹுதா உமர்

உலக சுகாதார நிறுவனத்தினால் 2005ஆம் ஆண்டு மே 7ஆம் திகதியிலிருந்து உலக உயர் இரத்த அழுத்த தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்த்தடுப்பு பிரிவினால் உப்பற்ற உணவை வலியுறுத்தும் விதத்திலான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாய் நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ். இர்சாத் அவர்களினால் ஏற்பாடு செய்ப்பட்ட இவ்விழிப்புணர்வு அறிவித்தல் நிகழ்வில் பொதுமக்களும் விளையாட்டு கழகங்களும் அதிக ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வினை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் இணைப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது


No comments: