News Just In

5/17/2023 08:27:00 PM

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்




தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அடிப்படையிலேயே ஒரு தீர்வு கிடைத்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் என்றும் அதற்காக முன்னோக்கி நகர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கிழக்குக்கு நியமிக்கப்படும் புதிய ஆளுனர் மூவின மக்களையும் அரவணைத்துக் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

No comments: