இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்த உலகளாவிய இராமகிருஷ்ணமிஷன் உபதலைவரும் சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ணமடத்தின் தலைவருமான அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் அவர்களுக்கு மிஷன் பழைய மாணவர்களாலும் பிரதேச மக்களாலும், நலன் விரும்பிகளாலும் பக்தி பூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது.
சுவாமிஜி அவர்கள் கல்லடி சந்தியில் இருந்து மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவித்து கல்லடி இராமகிருஷ்ணமிஷன் வரை அழைத்து வரப்பட்டார். பாதையின் இரு மருங்கிலும் மக்கள் தரித்து நின்று சுவாமிகளின் தரிசனத்தை பெற்றனர்.
No comments: