News Just In

5/16/2023 11:32:00 AM

விசேட தேவையுடையவர்களை தொழிலுக்கு ஊக்கப்படுத்த பயிற்சிநெறி!




நூருல் ஹுதா உமர்

மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனுசாரனையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தால்சுறுன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களை தொழிலுக்கு ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களை தொழில் ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சிநெறி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் , மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அருளானந்தம், எம்.வாயில், எஸ்.ராகினி ஆகியோர் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments: