ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் ஏ.எம்.எம். அம்தூத் 2021 மற்றும் 2022 காலப்பகுதியில் நடாத்தப்பட்ட தேசியமட்ட கராத்தே சுற்று போட்டியில் 02ம் மூன்றாம் இடங்களை பெற்றமைக்கான கௌரவிப்பு நிகழ்வு சாய்ந்தமருது அல்ஹிலால் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடாத்தப்பட்டு வர்ண விருது விழா வழங்கியமைக்காக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் முதல்வர் ஏ.எம். ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் பாடசாலை நிருவாகம் இம்மானவனை கௌரவித்தது.
இம்மாணவனை பயிற்றுவித்து வழி நடத்திய எமது பாடசாலையின் பயிற்றுவிப்பாளர் மெளலவி ஏ.ஆர். நவாஸ் மற்றும் பாடசாலை கராத்தே குழுவினருக்கும் எமது பாடசாலை சமூகம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி முதல்வர் ஏ.எம். ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments: